ADDED : ஜன 15, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : சேதுக்கரை ஊராட்சி பஞ்சந்தாங்கியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் முனியசாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆர்.செல்வராஜ் மற்றும் ஹிந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
---