sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாடியில் தபால் அலுவலகம் : இடமாற்ற கோரிக்கை

/

மாடியில் தபால் அலுவலகம் : இடமாற்ற கோரிக்கை

மாடியில் தபால் அலுவலகம் : இடமாற்ற கோரிக்கை

மாடியில் தபால் அலுவலகம் : இடமாற்ற கோரிக்கை


ADDED : ஆக 28, 2025 06:26 AM

Google News

ADDED : ஆக 28, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானையில் தபால் அலுவலகம் மாடியில் இயங்குவதால் முதியோர், பெண்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

திருவாடானையில் தபால் அலுவலகம் உள்ளது. இங்கு திருவாடானை, சி.கே.வல்லிபுரம், எல்.கே.நகர், அண்ணாநகர், பண்ணவயல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டிபாசிட், அடிப்படை சேமிப்பு கணக்கு, ஆர்.டி போன்ற பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகம் ஓரியூர் ரோடு அருகே இயங்கியது. தற்போது அங்கிருந்து மாறுதல் செய்யப்பட்டு பிடாரி கோயில் தெரு மாடியில் அமைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு முறையும் வயதானோர், கர்ப்பிணிகள், ஓய்வூதியர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர்.

வாடிக்கையாளர் நலன் கருதி தரை தளம் போன்ற இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:

அடிக்கடி பதிவு தபால், ரெக்கரிங் டெபாசிட், பென்ஷன் போன்ற சேவைகளுக்காக இந்த அலுவலகத்தை நாட வேண்டி உள்ளது.

ஒவ்வொரு முறையும் படி ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

உடன் தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது. மாற்று அலுவலகத்திற்கு அஞ்சல் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us