/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.20ல் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
/
செப்.20ல் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
ADDED : செப் 04, 2025 11:33 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வரும் செப்.,20 மதியம் 12:00 மணிக்கு நடைபெற உள்ளது.
தபால் சம்பந்தப்பட்ட புகாரில் அனுப்பிய தேதி, நேரம், பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு ஆகியவற்றுக்கான விபரங்களை தெரிவிக்க வேண்டும். சேமிப்பு வங்கி, காப்பீடு சம்பந்தமான புகார் எனில் கணக்கு எண், வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் கட்டிய விபரம், செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை கடிதத் தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே முகாமில் மனு கொடுத்து திருப்தியில்லை என்றால் தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகார் மனு தேவையில்லை. கூரியரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
செப்.,16க்குள் குறைகள் வந்து சேர வேண்டும் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.