ADDED : டிச 18, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்சங்கம் சார்பில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம்முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க உப தலைவர் காரிச்சாமி தலைமை வகித்தார்.கோட்டச்செயலாளர் சேகர், பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலைவகித்தனர். ஜி.டி.எஸ்., ஊழியர்களை இலக்கு என்ற பெயரில் மன உளைச்சல் ஏற்படுத்தும் போக்கை கைவிட வேண்டும்.
ஊழியர்களின் சொந்த அலைபேசியில் பயிற்சி மேற்கொள்வதை நிறுத்திவிட்டு இலாகாவால் தரப்படும் அலைபேசியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.