sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

/

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

ரயில்வே மேம்பாலத்தில் பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்


ADDED : ஜன 10, 2025 04:49 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ரோட்டோரம் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இருந்து கீழக்கரை, திருப்புல்லாணி, சாயல்குடி என துாத்துக்குடி, திருச்செந்துார் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ரோடு பராமரிப்பின்றி பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் வாகனங்கள் வேகமாக வரும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே உயிர் இழப்பிற்கு முன்னதாக ரயில்வே மேம்பாலம் ரோட்டை சீரமைக்க தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us