/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவருக்கு பிரம்படி பள்ளி முற்றுகை
/
மாணவருக்கு பிரம்படி பள்ளி முற்றுகை
ADDED : அக் 27, 2024 02:05 AM

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி பிராங்க்ளின். இவரது மகன் இங்குள்ள சந்தியா நகர் 'கிரைட்ஸ் தி கிங்' என்ற மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி கழிப்பறையில் சில மாணவர்கள் தகாத வார்த்தைகளை எழுதி உள்ளனர். முதல்வர் ஷாலினி, ஆசிரியர்கள் விசாரித்தனர்.
அக்., 24ல் பள்ளி ஆசிரியர்கள் பிராங்க்ளின் மகனை பிரம்பால் தாக்கினர். இதில், மாணவரின் கை, முதுகில் காயம் ஏற்பட்டது. பெற்றோர் முதல்வரிடம் முறையிடச் சென்றனர்.
பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி, பிராங்க்ளின் நேற்று தங்கச்சிமடம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து நேற்று மாலை உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர்.
ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,உமாதேவி தலைமையிலான போலீசார் சமரசம் செய்தும் பலனில்லை. நேற்று இரவு வரை பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.