/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏப்.25ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
ஏப்.25ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஏப் 23, 2025 05:41 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஏப்.,25ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டுகள் போட்டோக்கள் உடன் ஏப்.,25ல் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு பங்கேற்கலாம்.
இம்முகாமில் பணி நியமனம் பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.