/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்க திட்டம்; சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
/
கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்க திட்டம்; சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்க திட்டம்; சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்க திட்டம்; சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : டிச 25, 2024 04:07 AM

தொண்டி : எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலையை புதுப்பிக்கும் பணிகள் துவங்க இருப்பதால் ரோட்டோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது. கன்னியாகுமரி-சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக இச்சாலை உள்ளது.
தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. பாசிபட்டினம், தீர்த்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே அதிகமான பள்ளங்கள் உள்ளது. இதனால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் பலி எண்ணிக்கை அதிகரித்தது. சாலையின் இரு பக்கமும் சீமைக்கருவேலம் அடர்ந்துள்ளது.
எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் ரோட்டை மரங்கள் மறைத்திருந்தது. இந்த சாலையை புதுப்பிக்கும் பணிகள் துவங்க இருப்பதால் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:
எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை சாலையை உயர்த்தி அமைக்க நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக சாலையின் இருபக்கமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. ஜனவரியில் பணிகள் துவங்கும் என்றனர்.