sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டு

/

ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டு

ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டு

ராமேஸ்வரம் கோயிலில் அம்மனுக்கு காப்பு கட்டு


ADDED : செப் 22, 2025 03:18 AM

Google News

ADDED : செப் 22, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செப்., 22) முதல் நவராத்திரி விழா துவங்குகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் குருக்கள் நவராத்திரி விழாவிற்கு காப்பு கட்டி தீபாராதனை நடந்தது.

இன்று லட்சுமண தீர்த்தம் அருகில் உள்ள வர்த்தினி மஹாலில் பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

2ம் நாள் திருவிழாவான செப்.,23ல் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அருகில் அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், செப்., 24ல் மகாலட்சுமி, செப்., 25ல் சிவதுர்கை, செப்., 26ல் சரஸ்வதி, செப்., 27ல் கவுரி சிவபூஜை, செப்., 28ல் சாரதாம்பிகை, செப்., 29ல் கஜலட்சுமி, செப்., 30ல் மகிஷாசூரமர்த்தினி, அக்.,1ல் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அலங்காரத்தில் அருளாசி வழங்குவார்.

அக்.,2ல் விஜயதசமியையொட்டி வன்னி நோன்பு தரவையில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us