/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு
/
பொதுக்கழிப்பிட வளாகம் வீண் அரசு நிதி வீணடிப்பு
ADDED : ஜூலை 12, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம் : கடலாடி ஒன்றியம் வாலிநோக்கம் ஊராட்சியில் கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதியில் 2023ம் ஆண்டு ரூ.4.86 லட்சத்தில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 கழிப்பறைகள் கொண்ட வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளில் இருந்து பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கீழமுந்தல் கிராம பொதுமக்கள் கூறியதாவது: திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதை தவிர்ப்பதற்காக வாலிநோக்கம் ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டின்றி உள்ளது. கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.