sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

/

ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

ரேஷன் பொருட்களை கடத்தினால் தண்டனை கலெக்டர் எச்சரிக்கை


ADDED : பிப் 10, 2024 04:43 AM

Google News

ADDED : பிப் 10, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தினால் அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்புடைய பொது விநியோகத் திட்ட பொருட்களை கடத்துதல் மற்றும் பதுக்குதல் சட்டப்படி குற்றம். ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 பிரிவு 7 (1) (ஏ) (ii)- ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும். பொருட்களை கடத்துவதற்கு பயன்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்குதல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5990 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us