sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600

/

 மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600

 மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600

 மழையால் வரத்து குறைவு கருவாடு விலை உயர்வு நெத்திலி கிலோ ரூ.600


ADDED : நவ 22, 2025 12:27 AM

Google News

ADDED : நவ 22, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: சில நாட்களாக மேக மூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ராமேஸ்வரம், திருப்பாலைக்குடி, பாம்பன் பகுதியில் கருவாடு உற்பத்தி மற்றும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் கருவாடு கிலோவிற்கு 50 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், திருப்பாலைக்குடி பகுதிகளிலிருந்து மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சில நாட்களாக புயல் காரணமாக மழை பெய்துள்ளது. கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற வானிலை மையம் அறிவிப்பால் மீனவர்கள் கடலுக்குள் செல்வது குறைந்துள்ளது.

இதன் காரணமாக மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கருவாடு உலர்த்தும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் கிடைக்காததால் கன்னியாகுமரி, நாகர்கோவில், துாத்துக்குடி பகுதிகளிலிருந்து வரும் மீன் கருவாடு ராமநாதபுரத்தில் விற்கப்படுகிறது.

உள்ளூர் வரத்தின்றி கடந்த மாதம் ரூ.400க்கு விற்ற நெத்திலி மீன் கருவாடு தற்போது கிலோ ரூ.600 வரையும், இதே போன்று காரை, நகரை, பன்னா, திருக்கை உள்ளிட்ட கருவாடுகள் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us