ADDED : நவ 27, 2024 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் இரவு வரை சாரல்மழை பெய்ததால் மக்கள் குளிர்ந்த காற்றை அனுபவித்தனர்.ரோடுகள் சேறும் சகதியுமானதால் வாகன ஓட்டிகள்சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை கடந்தசில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.இதன் காரணமாக நகர், புறநகர் பகுதிகளில் தாழ்வானஇடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று காலை முதல்இரவு வரை தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போதுமிதமான மழை பெய்தது.
இதனால் மாணவர்கள்,அலுவலர்கள், பணியாளர்கள் மழையில் நனைந்துசிரமப்பட்டனர்.குளிர்ந்த காற்று வீசுகிறது.ரோடுகள் சேறும் சகதியுமாகியுள்ளதால்வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை 6:00 மணி வரை ராமநாதபுரத்தில் 10 மி.மீ., ராமேஸ்வரம் 15 மி.மீ., பாம்பன் 15 மி.மீ.,மழை பதிவானது.

