/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மழை : ரோடுகளில் வெள்ளம்
/
ராமேஸ்வரத்தில் மழை : ரோடுகளில் வெள்ளம்
ADDED : நவ 16, 2024 02:11 AM
ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று காலை முதல் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் மதியம் 12:00 முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு மழை நீர் பல அடி உயரம் தேங்கி கடலில் கலந்தது.
ராமநாதசுவாமி கோயில் நான்கு ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து அக்னி தீர்த்த கடலில் கலந்தது. மேலும் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ.,க்கு மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் வாகனங்கள், டூவீலர்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.