ADDED : அக் 29, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சோழந்துார், சனவேலி, ஆனந்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இதனால் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில், ஈரப்பதம் மட்டுமே நிலவும் நிலையில் வயலில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கனமழை இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கன மழையை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.