ADDED : அக் 16, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. திருவாடானை தாலுகா அலுவலகம் பின்புறம் சார்பதிவாளர், சார்நிலை கருவூலம் போன்ற அலு வலகங்கள் உள்ளன. மழையால் அலுவலகங் களின் வாசல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
மக்கள், அலுவலர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை நீர் வழிந்தோட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.