sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் ஸ்டாண்ட், வீதிகளில் தேங்கும் மழைநீர்; வடிகால் வசதியின்றி ராமநாதபுரத்தில் அவலம்

/

பஸ் ஸ்டாண்ட், வீதிகளில் தேங்கும் மழைநீர்; வடிகால் வசதியின்றி ராமநாதபுரத்தில் அவலம்

பஸ் ஸ்டாண்ட், வீதிகளில் தேங்கும் மழைநீர்; வடிகால் வசதியின்றி ராமநாதபுரத்தில் அவலம்

பஸ் ஸ்டாண்ட், வீதிகளில் தேங்கும் மழைநீர்; வடிகால் வசதியின்றி ராமநாதபுரத்தில் அவலம்


ADDED : ஆக 09, 2024 10:44 PM

Google News

ADDED : ஆக 09, 2024 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் பலத்த மழை பெய்ததால் பஸ் ஸ்டாண்ட், ராமேஸ்வரம் ரோடு, வீதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். எனவே மழை நீரை வீணடிக்காமல் ஊருணிகளில் சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரத்தில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் சில நாட்களாக காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனால் நகராட்சி, சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியது.

குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் குளம் போல தேங்கியது. இப்பகுதியில் நடந்து செல்பவர்களும், டூவீலரில் செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர். அரண்மனை பகுதியில் தேங்கிய மழை நீரால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

நகர், புறநகர் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி ஒரு மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்தால் கூட தண்ணீர்கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் குளம் போல தேங்குகிறது.

எனவே மழைநீரை தடையின்றி ஊருணிகளில் சேமிக்க வடிகால்களை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவம் புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us