ADDED : ஜூலை 25, 2011 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் அருகே ஏந்தலை சேர்ந்த சரவணனை முனுசுவலசையை சேர்ந்த முனியசாமி மற்றும் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெட்டி கொலை செய்தனர்.
இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் கோர்ட்டில் கார்த்திக், முனியசாமி ஆகியோர் சரண்டைந்தனர். நேற்று முனுசுவலசையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(27), வேலாயுதம் ஆகியோர் ராமேஸ்வரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரையும் ரிமாண்டில் அடைக்க, மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டார்.