ADDED : ஆக 25, 2011 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய சபையின் சார்பில் உயர் கல்வி படிக்கும்
நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா மீனாட்சி அம்மன் கோவில்
மண்டபத்தில் நடந்தது.
சபைத் தலைவர் ராசிபோஸ் தலைமை வகித்தார். செயலாளர்
சிவமோகன் வரவேற்றார். கோயில் டிரஸ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன்,
பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி,
கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் உயர்கல்வி தாளாளர்கள் மற்றும்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.