நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே தாமோதரன்பட்டினம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று பகல் 2 மணியளவில் பாய்மர படகு போட்டி நடந்தது.
போட்டியில் ஒரு படகில் ஆறு வீரர்கள் வீதம் எட்டு படகுகள் பங்கேற்றன. வான வெடி சத்தம் கேட்டவுடன் படகுகளை காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு வீரர்கள் செலுத்தினர். லெட்சுமணன் முதல் பரிசும், ராக்கப்பன் இரண்டாம்,பழனி மூன்றாம் பரிசும் பெற்றனர்.