ADDED : செப் 01, 2011 09:01 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேங்காய் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சொக்கநாதர்கோயில் விநாயகர், அடைக்கலம் காத்த விநாயகர் கோயில், லட்சுமிபுரம் ஊரணிக்கரை விநாயகர் கோயில், சித்திவிநாயகர் கோயில், வல்லபை விநாயகர் கோயில், தர்மதாவள விநாயகர் கோயில், மாங்கல்ய விநாயகர் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை, அவல் பொரி படைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தெற்கு தெரு, பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, ஜவஹர்நகர், வடக்கு தெரு, தாயுமான சுவாமி கோயில் தெரு, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், முத்துராமலிங்க தேவர். பஸ் ஸ்டாண்டு, ராமகிருஷ்ணபுரம், சம்பை கிராமம், மருதுபாண்டியர் நகர், லெட்சுண தீர்த்தம் உட்பட ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கீழக்கரை சித்தி விநாயகர் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் வாலில் உள்ள நர்த்தன கணபதி கோயிலில் கொழுக்கட்டை, அவல், பொரி வைத்துசிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் நடந்தது. உத்தரகோசமங்கை, சின்ன மாயாகுளம் அலவாய்கரை, லட்சுமிபுரம், வெட்டமுனை, தொத்தமகன் வாடி, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், பெரியபட்டினம் மரைக்காயர்நகர், முத்துப்பேட்டை இந்திரா நகர் உட்பட பல கிராமங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.