/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கலவரம் டில்லி குழு ஆய்வு
/
பரமக்குடி கலவரம் டில்லி குழு ஆய்வு
ADDED : செப் 15, 2011 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : டில்லியில் உள்ள தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணைய உறுப்பினர் லதா தலைமையிலான குழு, பரமக்குடியில் நடந்த கலவர பகுதிகள் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடத்தை நேற்று ஆய்வு மேற்கொண்டது.
பரமக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராம்பிரபு, ஆர்.டி.ஓ., மீராபரமேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். இக் குழு மாலையில் ராமநாதபுரம் கலெக்டர் அருண்ராய் மற்றும் உயர்அதிகாரிகளை சந்தித்து கலவர விபரம் அறிந்தனர்.