/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சரணாலயங்களில் வலசை வரும் பறவைகள் பலவிதம்
/
ராமநாதபுரம் சரணாலயங்களில் வலசை வரும் பறவைகள் பலவிதம்
ராமநாதபுரம் சரணாலயங்களில் வலசை வரும் பறவைகள் பலவிதம்
ராமநாதபுரம் சரணாலயங்களில் வலசை வரும் பறவைகள் பலவிதம்
ADDED : நவ 01, 2024 04:26 AM

ராமநாதபும் மாவட்டத்தில் பல பெரிய குளங்கள், கண்மாய்கள், அமைந்துள்ளன. நுண்ணிய உயிரினங்களும், மீன்களும், ஆமைகளும் வாழ்கின்றன.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது இவை மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகிறது.
இந்தப் பறவைகள் தங்கள் உணவக்குத் தேவையான மீன்களையும் மற்ற பிற புழுக்களையும் கண்மாயில் இருந்து பிடித்துக் கொள்கின்றன.
1980ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வனத்துறையால் சரணாலயப்பகுதிக்குள் நாட்டு கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இவை நன்றாக வளர்ந்து பறவைகளுக்கு கூடு கட்டுவதற்கு பயன்படுகின்றன. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வன உயிரின காப்பாளரின் கட்டுப்பாட்டில் சித்திரங்குடியில் 47.63 எக்டேரில் சரணாலயம் அமைந்துள்ளது. காஞ்சிரங்குளத்தில் முதுகுளத்துார்- - கமுதி ரோட்டில் 104.21 எக்டேரிலும், மேலசெல்வனுார், கீழசெல்வனுாரில் கிழக்கு கடற்கரை சாலை சிக்கல்- - சாயல்குடி இடையே 593.08 எக்டேரில் உள்ளது.
மேலும் ராமநாதபுரம்--நயினார் கோவில் ரோட்டில் தேர்த்தங்கலில் 29.5 எக்டேரில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
மரங்கள்
பறவைகள் சரணாலயங்களின் உள்ளே நாட்டு கருவேல மரங்களும், வெளிப்புறம் வரப்புகளில் காட்டு கருவேல மரங்களும் உள்ளன. வரப்புகளில் புளி, வேம்பு, பனை மரங்கள் உள்ளன.
பறவைகள் வருகை
மழைக்கால வலசை போகும் பறவைகளுக்கு சிறந்த புகலிடமாக பறவைகள் சரணாலயங்கள் திகழ்கின்றன. இந்த பறவைகள் உணவைத் தேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன. இவற்றில் சில இங்கேயே கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகள் உணவுக்காவும், உகந்த சிதோஷ்ண நிலைக்கு மட்டும் இங்கு வந்து போகின்றன.
வலசை வரும் பறவைகள்
மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, கரண்டி வாயன், பாம்பு தாரா, தாழைக்கோழி, நாமக்கோழி, சின்ன முக்குளிப்பான், நீர்க்காகம், கொக்கு, நாரை, நீலச்சிறகு வாத்து.
சுற்றுலா வர ஏற்ற காலம்
பொதுவாக அக்டோபர் முதல்- ஜனவரி வரை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 700 மி.மீ., மழை பெய்கிறது. சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான தகவல்களை தருவதற்காக சரணாலயங்கள் அருகே தகவல் மையங்கள் இருக்கின்றன. 10 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரங்கள் சித்திரங்குடி, கீழசெல்வனுார், மேலசெல்வனுார் ஆகிய இடங்களில் உள்ளன.
தீப்பற்றக்கூடிய கருவிகள், அலைபேசி, இசைக்கருவிகளை கொண்டு செல்லக் கூடாது. கண்மாய்க்குள் மீன் பிடிக்கவோ, நீச்சலடித்து குளிக்கவோ அனுமதி இல்லை. பறவைகளை பார்க்கும் போது சப்தம் எழுப்பி தொந்தரவு செய்யக் கூடாது. தண்ணீர் பாட்டில், சிகரெட், பாலிதீன் பை ஆகியவற்றை எறியக்கூடாது. பட்டுபோன விறகு கட்டை, மரக்கிளைகள், பூக்களை எடுக்க கூடாது.
மேலும் விபரங்களுக்கு வன உயிரினக் காப்பாளர், மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், ராமநாதபுரம், 04567 --230 079, மின்னஞ்சல்: gommnp@gmail.com, இணையதளம்: www.gommnp.in. தொடர்பு கொள்ளலாம்.