sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை


ADDED : நவ 21, 2024 01:36 AM

Google News

ADDED : நவ 21, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அக்., 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரு படகில்இருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இவர்களை நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் 2 ஆண்டுகளுக்குள் எல்லை தாண்டி வந்து மீண்டும் கைதானால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், மேலும் 2-வது தடவையாக கைதான இருவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ஒரு படகின் உரிமையாளரும் டிரைவருமான ராமபாண்டிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23.20லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு படகின் டிரைவர் மகேந்திரன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us