/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
/
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ADDED : செப் 25, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்,:ராமேஸ்வரத்தில் இருந்து செப்.23ல், 60 சிறிய ரக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் வழக்கம் போல் இந்திய- இலங்கை எல்லையில் மீன் பிடித்த போது அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
கைதுக்கு பயந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்தனர்.
ஆனால் எதிர்பார்த்த மீன் வரத்தின்றி நஷ்டத்துடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் கெடுபிடியால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தெரிவித்தனர்.