sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு வலைகள் மூழ்கடிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு வலைகள் மூழ்கடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு வலைகள் மூழ்கடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு வலைகள் மூழ்கடிப்பு


ADDED : ஜூன் 25, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி மூழ்கடித்து அவர்களை விரட்டியடித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 520 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் நேற்று 3 கப்பலில் இலங்கை கடற்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அச்சத்துடன் மீன்பிடித்தனர். இதனிடையே மீனவர்களின் 5க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

பின் கடலில் வீசிய வலைகளை வெட்டி மூழ்கடித்து படகின் டிரைவர்களை தாக்கினர். ஆனால் யாருக்கும் காயமில்லை. பின் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் 5 படகுகளுக்கும் தலா ரூ.1 லட்சம் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் தொடர் கெடுபிடியால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us