/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி
/
ராமேஸ்வரம் மீனவர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி
ராமேஸ்வரம் மீனவர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி
ராமேஸ்வரம் மீனவர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி
ADDED : ஆக 17, 2025 12:27 AM

ராமநாதபுரம்: 'தங்கச்சிமடத்தில் ஆக.,19ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உறுதி' என ராமேஸ்வர மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வர மீனவர்கள் ஆக.,19 நடத்தவுள்ள ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மீனவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர் சங்க நிர்வாகி எமரிட் கூறியதாவது:
இலங்கை கடற் படையால் சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர் களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து ஆக.,19 தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தோம்.
இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நிச்சயம் நடக்கும். அதற்குள் மீனவர்களை விடுதலை செய்தால் போராட்டத்தை மறு பரீசிலனை செய்வோம். ரயில் மறியலில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.