/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.6 வரை சிறைக்காவல்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.6 வரை சிறைக்காவல்
ADDED : அக் 25, 2024 02:35 AM

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை நவ.6 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ராமபாண்டி, கோகிலா ஆகியோரது படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த மீனவர்கள் மோகன் 22, மகேந்திரன் 42, ராம்குமார் 25, மாரிகணேஷ் 37, கண்ணன் 38, அன்பரசன் 25, முனீஸ்பிரபு 23, குருசெல்வம் 37, பாண்டி 59, முத்து கருப்பையா 56, ராமபாண்டியன் 45, ஆரோக்கிய அந்தோணிராஜ் 47, ராஜு 38, ஆண்டனிபிச்சை 36, பூமிநாதன் 39, சுந்தரபாண்டி 48, ஆகியோரை கைது செய்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவ.6 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.