sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

/

மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 07, 2024 04:18 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் சூறாவளிக் காற்று இன்றி இயல்பு நிலையில் இருந்தும் மீன்பிடிக்க செல்ல தடை விதித்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வங்கக்கடலில் சூறாவளிக் காற்று, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இந்த அறிவிப்பை ஜன.5 இரவு 7:00 மணிக்கு அதிகாரிகள் வெளியிட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று மீன்பிடிக்க செல்ல ஜன. 5 பகலில் மீன்களை பதப்படுத்த ஒருபடகில் தலா 10 ஐஸ் பார்கள், உணவு பொருள்களை மீனவர்கள் ஏற்றி வைத்தனர்.

இந்நிலையில் தடை விதித்தால் ஐஸ் பார்கள் கரைந்து, உணவுப் பொருள்கள் கெட்டுப் போனதால் ஒரு படகு உரிமையாளருக்கு ரூ. 1500 முதல் 2000 வரை விரையமானது.

இதனால் 600 படகிற்கும் ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. மேலும் நேற்று ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளிக் காற்று, கடல் கொந்தளிப்பு இன்றி இயல்பாக இருந்தது. இச்சூழலில் தடை விதித்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:

சென்னையில் சூறாவளி, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு தடை விதித்தனர். இதனை முன்கூட்டியே தெரிவிக்காமல் போனதால் படகில் ஐஸ் பார்கள், உணவுப் பொருள்கள் வைத்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இயற்கை சீற்றத்தால் ராமேஸ்வரத்தில் பாதிப்பு இல்லை என முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதது தான் மிச்சம் என்றார்.






      Dinamalar
      Follow us