/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்.,9 வரை சிறைக்காவல்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்.,9 வரை சிறைக்காவல்
ADDED : ஏப் 02, 2025 02:46 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஏப்., 9 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 17ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கென்னடி என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, இதில் இருந்த மீனவர்கள் சங்கர் 53, அர்ச்சுனன் 35, முருகேசன் 49, ஆகிய மூவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
வாய்தா நாளான நேற்று மூவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களின் சிறைக்காவலை ஏப்., 9 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்த குடும்பத்தினர் சிறைக்காவல் நீட்டிப்பு தகவலால் அதிர்ச்சி அடைந்தனர்.