sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓய்வு

/

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓய்வு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓய்வு

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓய்வு


ADDED : செப் 25, 2025 03:17 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: புரட்டாசி விரதம் துவங்கியதால் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்ததால் நேற்று முதல் பாம்பனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வெடுத்தனர்.

செப்., 22 முதல் நவராத்திரி விழா துவங்கியதால் நாடு முழுவதும் ஹிந்துக்கள் விரதம் இருக்கின்றனர். இதனால் சைவ உணவுக்கு மாறியதால் கோவை, கேரளா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டில் மீனுக்கு மவுசு குறைந்தது. இதனால் கிலோ மீனுக்கு ரூ. 50 முதல் 120 வரை விலை குறைந்தது.

இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நவராத்திரி விழா முடிந்த பின் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்தனர்.

இதனால் 500 படகுகளை கரையில் நிறுத்தி வைத்து வீடுகளில் முடங்கினர். ஆனால் மீதமுள்ள சிறிய ரக 100 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். இப்படகில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இறால், நண்டு, கணவாய் மீன்கள் சிக்கும். தமிழக மார்க்கெட்டில் விற்ககூடிய மீன்கள் அதிகமாக சிக்க வாய்ப்பு இல்லை.






      Dinamalar
      Follow us