/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
/
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
ADDED : அக் 02, 2024 02:49 AM

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (அக்.2) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரத்தில் மீனவர் சங்கத் தலைவர் ஜேசு தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் செப்.28ல் இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் உள்ளிட்ட ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் 150 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் 190 விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சு நடத்தி பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்கவும், படகுகளை மீட்கவும், மீனவர்கள் பிரச்னைக்கு சமூக தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது எனவும், அக்.,3ல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர். மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், எமரிட், தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.