sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு


ADDED : பிப் 01, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேருக்கு பிப்.,17 வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்தாண்டு டிச.,23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற அந்தோணி ஆரோன், பூண்டிராஜ் ஆகியோரது விசைப்படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்து அதில் இருந்த 17 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். அவர்களது நீதிமன்ற காவல் தேதி முடிந்ததையடுத்து நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை பிப்.,17 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 38 நாட்களாக சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us