/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்
/
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.12 தைப்பூச தேரோட்டம் அன்று நடை அடைக்கப்படும்
ADDED : பிப் 02, 2025 02:18 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப தேரோட்டம் பிப்., 12 ல் நடக்க உள்ளது. அன்று கோயில் நடை அடைக்கப்படும்.
பிப்.,11ல் தைப்பூசத்தையொட்டி அன்றிரவு 7:00 மணிக்கு இக்கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயில் குளத்தில் பிள்ளையார் தெப்ப தேரோட்டம் நடக்கும். பிப்.,12ல் தைப்பூச தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5:00 முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதை தொடர்ந்து காலை, சாயரட்ச பூஜைகள் நடக்கும்.
அதன் பிறகு கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி மதியம் 1:30 மணிக்கு லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கும். மாலை 5:00 மணிக்கு தெப்ப மண்டபத்தில் தீபாராதனை முடிந்து மாலை 6:00 முதல் இரவு 7:00 மணிக்குள் சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் தைப்பூச தெப்பத்தில் எழுந்தருள்வார்கள்.
இரவு 7:30 மணிக்கு தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்பத் தேரோட்டம் வலம் வரும். பின் சுவாமி, அம்மன் வீதி உலா புறப்பாடாகி கோயிலுக்கு சென்றடைவர். பிப்.,12ல் காலை 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடானதும் கோயில் நடை அடைக்கப்படும். அன்று முழுவதும் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.