/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள் கோயிலில் பிப்.16ல் ரத சப்தமி விழா
/
பெருமாள் கோயிலில் பிப்.16ல் ரத சப்தமி விழா
ADDED : பிப் 10, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா பிப்.16ல் நடக்கிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதன்படி பிப்.16 காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நிறைவடைந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அலங்காரமாகிறார்.
அன்று காலை 8:00 மணிக்கு பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எமனேஸ்வரம் அனைத்து தெருக்களிலும் வலம் வருவார். தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி மாலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைவார். விழா ஏற்பாடுகளை ரத சப்தமி விழாக் குழுவினர் மற்றும் எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.