தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 1

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 1

ரேஷன் அரிசி பறிமுதல்: கைது 1


ADDED : ஜூலை 19, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காரில் கடத்திவரப்பட்ட 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., அருண் தலைமையிலான போலீசார் பரமக்குடி காக்கா தோப்பு வைகை ஆற்று படுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தியபோது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தலா 5 கிலோ எடை உள்ள 23 மூடைகளில் 1150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்து, கார் உரிமையாளரான திருச்செந்துார் மெய்ஞானபுரம் பெரியசாமியை 36, கைது செய்தனர். தப்பி ஓடிய பரமக்குடி சோமநாதபுரத்தை சேர்ந்த கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us