ADDED : பிப் 12, 2026 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தினகரன் தலைமை வகித்தார். அப்போது பொது விநியோகத்திற்கு என தனித்துறை வேண்டும். உணவுப் பொருட்களை பொட்டலமாக வழங்கவும், புதிய ஊதிய உயர்வு அமல்படுத்தவும், அனைத்து கடைகளிலும் எடையாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.

