/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பணியாளர்கள் மறியல் போராட்டம்: 30 பேர் கைது
/
ரேஷன் பணியாளர்கள் மறியல் போராட்டம்: 30 பேர் கைது
ADDED : நவ 08, 2024 04:15 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். பொது விநியோகத்திற்கு என தனித்துறை, உணவு பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ரோடு மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து 30 பேரை கைது செய்தனர்.
மாவட்டப் பொருளாளர் செல்வம், துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.