ADDED : ஜூலை 23, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிபுளி; ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் கிளை நுாலகத்தில் வாசகர் வட்டம் துவக்க விழா நடந்தது.
வாசகர் வட்டத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். கிளை நுாலகர் பாரிசோமநாதன் வரவேற்றார். ரூ.1000 செலுத்தி பலர் நுாலக புரவலராக சேர்ந்தனர்.
நுாலகத்தின் பயன், வாசிப்பின் அவசியம் ஆகிய தலைப்புகளில் கவிஞர்கள் அழகுமுடையான், சாகுல் ஹமீதுகான் பேசினர். ஓய்வுபெற்ற ஆசிரியர் நம்புராஜன், தமிழ் ஆர்வலர் வையச்சாமி பங்கேற்றனர்.