sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

/

அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : ஆக 27, 2025 12:28 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ஓராண்டுக்கும் மேல் தராமல் இழுத்தடித்த வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் தங்கசாமி 69. இவரது நிலத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட வீட்டை தனது மகன் கண்ணனுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் கண்ணன் வீட்டின் பத்திரத்தை உச்சிப்புளியில் உள்ள ராமநாதபுர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தில் ரூ.9 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். வட்டியுடன் ரூ.12 லட்சம் செலுத்தி பத்திரத்தை மீட்டுள்ளார்.

அதன் பின் மீண்டும் பத்திரத்தை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். திரும்ப ரூ.13 லட்சம் வட்டியுடன் செலுத்தினால் தான் பத்திரம் வழங்கப்படும் என வங்கித்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்த தயாராக இருந்தும் ஓராண்டுக்கும் மேலாக பத்திரத்தை தர மறுப்பதாக ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப் பளித்தார்.






      Dinamalar
      Follow us