ADDED : பிப் 10, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: மதுரை மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் பிப்.6, 7ல் விருதுநகர் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. போட்டியில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன.
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி அணியினர் கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை முகம்மது சதக் அறக்கட்டளை சிறப்பு இயக்குனர் ஹாமீது இப்ராஹிம், கல்லுாரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா, முதல்வர் சேக் தாவூது, உடற்கல்வி இயக்குநர்கள் மருதாச்சல மூர்த்தி, செந்தில் முருகன் ஆகியோர் பாராட்டினர்.