/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை
/
பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை
பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை
பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற ரோந்து கப்பல் திறப்பு விழாவிற்கு ஒத்திகை
ADDED : பிப் 01, 2025 01:51 AM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் கடந்து சென்றது. இதன் மூலம் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு ஒத்திகை நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாம்பன் கடலில் 2020ல் புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணி துவங்கியது. இப்பாலம் நடுவில் துாக்கு பாலம் பொருத்துவதற்காக 2024 ஏப்., முதல் ரயில் பாலங்களை கடந்து செல்ல கப்பல்கள், படகுகளுக்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. 9 மாதங்களுக்கு பிறகு நேற்று புதிய மற்றும் பழைய ரயில் துாக்கு பாலத்தை ரயில்வே ஊழியர்கள் திறந்தனர்.
அப்போது ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரோந்து கப்பல் ரயில் பாலங்களை கடந்து சென்றது. இதனை மதுரை ரயில்வே கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர், சீனியர் சிக்னல் பொறியாளர் ராம்பிரசாத், சீனியர் எலக்ட்ரிக்கல் பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் பார்வையிட்டனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளதால் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்க உள்ளனர். விழாவில் புதிய, பழைய பாலத்தின் துாக்கு பாலங்கள் திறக்கப்பட உள்ளதால் நேற்று அதற்கான ஒத்திகை நடந்தது.
பாலம் திறந்து மூடுவதை பிரதமர், ரயில்வே அமைச்சர் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மேடையில் நின்றபடியோ அல்லது இந்திய ரோந்து கப்பலில் சென்றபடியோ பார்வையிட உள்ளனர். அதற்காக நேற்று பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.