ADDED : மார் 11, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மதநல்லிணக்க இப்தார் விழா நடந்தது. எஸ்.டி.பி.ஐ., கட்சி நகர் தலைவர் முகம்மது நாசர் அலி தலைமை வகித்தார். வக்கீல் சங்க தலைவர் கலந்தர்ஆசிக் வரவேற்றார்.
மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், ஹிந்து பரிபாலன சபை என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் முகமது முஜாஹிதீன் நன்றி கூறினார்.
