/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா
/
மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விழா
ADDED : மார் 08, 2026 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் எஸ்.எம்.ஏ., குட்லு மஜித் பள்ளி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடை பெற்றது.
டாக்டர் செந்தில் நாயகம் தலைமை வகித்தார். டாக்டர் ராஜ முகமது, ஜமாத் தலைவர் ஹாஜா நஸ்ருதீன், முன்னாள் ஜமாத் தலைவர் பஷீர் அகமது முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் சதக்கப்துல்லா வரவேற்றார். ஆலிம்கள் ஷேக் முகைதீன், முகமது அபூபக்கர் சித்திக் ஆகியோர் நோன்பின் மான்மை குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.
கலந்து கொண்ட அனைவரும் நோன்பு திறந்த பின் உணவுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

