sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : பிப் 21, 2024 11:01 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் கடற்கரை ஓரங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் இடங்களை முள் வேலி அமைத்து ஆக்கிரமித்திருந்தனர்.

இது குறித்து எஸ்.பி.பட்டினம் மக்கள் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த ஆண்டு டிச.4 ல் மனு அளித்தனர்.

அந்த மனுவை திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று கடற்கரை ஓரங்களில் ஆங்காங்கே சிலர் முள்வேலி அடைத்து ஆக்கிரமித்திருந்த இடங்கள் புல்லுார் ஆர்.ஐ., ஜெயலட்சுமி, மருங்கூர் குருப் வி.ஏ.ஒ., ராஜேஸ் முன்னிலையில் அகற்றபட்டது.

எஸ்.பி.பட்டினம் மக்கள் கூறுகையில் எஸ்.பி.பட்டினம் கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.

அந்த ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us