/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
/
ராமநாதபுரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
ராமநாதபுரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
ராமநாதபுரத்தில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
ADDED : பிப் 05, 2025 05:01 AM
ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பிற மாவட்டங்களில் இருந்து அரசு நெல் அறுவடை இயந்திரங்கள் கூடுதலாக வரவழைக்கப்படுகிறது.தனியார் அறுவடை இயந்திரங்களுக்கும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணி நடக்கிறது. வேளாண் துறைக்கு சொந்தமாக அறுவடை இயந்திரம் இல்லாதால் தனியார் இயந்திர உரிமையாளர்கள் டிராக் வகை இயந்திரத்திற்கு அதிகப்படியான கட்டணமாக மணிக்கு ரூ.3000 முதல் ரூ.3500 வரை வாடகை வசூலிக்கின்றனர்.
இந்த வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுளளது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியிருப்பதாவது:
டிராக் வகை அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகை ரூ.2800 மற்றும் டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு வாடகை ரூ.1800 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வேளாண் பொறியியல் துறையின் ஒரு டிராக் வகை அறுவடை இயந்திரத்திற்குவாடகை மணிக்கு ரூ.1880 ஆகும்.மேலும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து 2 டயர் வகை (வாடகை ரூ.1160) அறுவடை இயந்திரம் தற்காலிகமாக பெறப்பட்டுள்ளது. மேலும்கூடுதலாக அறுவடை இயந்திரங்கள் கேட்டுள்ளோம்.
விவசாயிகள் வேளாண் துறையின் இ-வாடகைத் திட்டத்தில் அறுவடை இயந்திரத்திரங்களை உழவன் செயலியில் முன்பதிவு செய்து பெற்று பயன் பெறலாம். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகையைவசூல் செய்து அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கூடுதலாக தொகை கேட்டால் வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுலர்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றார்.