sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களுக்காக பாலம் சீரமைப்பு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

/

மீனவர்களுக்காக பாலம் சீரமைப்பு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

மீனவர்களுக்காக பாலம் சீரமைப்பு  உயர்நீதிமன்றத்தில் தகவல்

மீனவர்களுக்காக பாலம் சீரமைப்பு  உயர்நீதிமன்றத்தில் தகவல்


ADDED : அக் 26, 2024 04:55 AM

Google News

ADDED : அக் 26, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம்தொண்டி கலந்தர் ஆசிக் அகமது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தொண்டி அருகே சோழியக்குடி கடலில் மீனவர்களுக்காக 'ஜெட்டி' பாலம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்றுவர். மீன்பிடித்து திரும்பி வந்து அவற்றை இறக்குவர்.

பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் நிலை தடுமாறி பாலத்தின் ஓட்டை வழியாக விழுந்து காயமடைகின்றனர். சீரமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள்ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.

அரசு வழக்கறிஞர்: ரூ.10 கோடியில் சீரமைக்க அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதிகள்: ஓராண்டிற்குள்பாலத்தை சீரமைக்காவிடில் மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு உத்தரவிட்டு முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us