ADDED : ஆக 26, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம், சத்திரக்குடி வாழவந்தாள்புரத்தை சேர்ந்த நுாருல் அமீன் மகள்கள் செய்யது அஸ்பியா பானு 13, சபிக்கா பானு 9, ஆக.,23 வீட்டருகே வேப்பம் முத்து சேகரிக்க சென்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சிறுமிகள் இருவரும் உயிரிழந்தனர்.
அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தது குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.