sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை-திருவெற்றியூர் இரு வழிச்சாலை அமைக்க கோரிக்கை

/

திருவாடானை-திருவெற்றியூர் இரு வழிச்சாலை அமைக்க கோரிக்கை

திருவாடானை-திருவெற்றியூர் இரு வழிச்சாலை அமைக்க கோரிக்கை

திருவாடானை-திருவெற்றியூர் இரு வழிச்சாலை அமைக்க கோரிக்கை


ADDED : அக் 13, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 13, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் சாலையை இரு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. திருவாடானையிலிருந்து திருவெற்றியூருக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை செல்கிறது. இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்பவர்கள் திருவெற்றியூர் வழியாக வீரசங்கலிமடம் மற்றும் மணக்குடிக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்துவதால் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆகவே ஒரு வழிச்சாலையாக உள்ள இச்சாலையை இரு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது குறித்து குளத்துார் ஊராட்சி தலைவர் குமார் கூறியதாவது:

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் விழாக்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். பாதயாத்திரையாகவும், வேன், கார்களில் வருபவர்களும் அதிகம்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கடம்பாகுடி ஆர்ச் முதல் திருவெற்றியூர் வரை பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

ஆகவே இச்சாலையை இரு வழிச்சாலையாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருவாடானை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

திருவாடானையிலிருந்து திருவெற்றியூர் 16 கி.மீ., உள்ளது. இதில் 4 கி.மீ., இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 கி.மீ., படிப்படியாக இரு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்றனர்.

----






      Dinamalar
      Follow us