sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சீர்மரபினர் நலவாரியத்தில் நிரந்தர அடையாள அட்டை கோரிக்கை

/

சீர்மரபினர் நலவாரியத்தில் நிரந்தர அடையாள அட்டை கோரிக்கை

சீர்மரபினர் நலவாரியத்தில் நிரந்தர அடையாள அட்டை கோரிக்கை

சீர்மரபினர் நலவாரியத்தில் நிரந்தர அடையாள அட்டை கோரிக்கை


ADDED : நவ 30, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி; தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் முழுவதும் தற்போது நடக்கிறது.

இதில் அடையாள அட்டையை நிரந்தர அடையாள அட்டையாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. கடலாடி சீர் மரபினர் நலவாரிய உறுப்பினர் முத்து கூறியதாவது:

கடந்த கொரோனா காலத்தில் தமிழக அரசால் அடையாள அட்டையின்படி ரூ.2000 வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது உள்ளது.

கொரோனா காலத்தில் புதுப்பிக்கும் தேதி முடிவடைந்ததால் என்னால் புதுப்பிக்க இயலவில்லை.

இந்நிலையில் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் புதுப்பிக்க கொடுத்து பல மாதங்களாகியும் புதுப்பித்து தரவில்லை. சீர்மரபினர் நலவாரிய அட்டை காலாவதி ஆகிவிட்டது.

என்னை உறுப்பினராய் தகுதி இழக்க செய்து விடுவார்களோ என்ற நிலை உள்ளது.

எனவே கட்டடத் தொழிலாளர்கள் நலவாரிய அடையாள அட்டை பயன்படுத்துவது போன்று நிரந்தர அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us